Posts

நூலக போட்டியில் முதலிடம் பெற்றது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை

Image
  நூலக போட்டியில் முதலிடம் பெற்றது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி  தேசிய பாடசாலை இலங்கை நூலக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய ரீதியிலான பாடசாலை சிறந்த செயற்பாட்டு நூலக போட்டி நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 38 பாடசாலைகளில் இறுதிச்சுற்றில் தெரிவாகிய ஒரேயொரு தமிழ் மொழி மூலமான பாடசாலை எனும் பெருமையுடன் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்தது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை நூலகம்.  இதற்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 27/06/2025 அன்று கண்டியில் இடம்பெற்றது. இதன்போது இந்நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் A.L. நஸீபா இக்பால் (SLPS), அவர்கள் நேரடியாக அழைக்கப்பட்டு பாடசாலை சார்பான கௌரவிப்பினையும் சான்றிதழினையும் நினைவுச் சின்னத்தினையும் பெற்றுக் கொண்டார். மற்றும் சிறந்த பாடசாலை செயற்பாட்டு நூலக போட்டியில் சிறந்த நூலகச் செயற்பாட்டாளருக்கான சான்றிதழினை A.L. றினோஸ் (பட்டய நூலகர்)  அவா்கள் பெற்றுக் கொண்டார்கள். மேலும் இவ்வரலாற்று நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக 02/07/2025 அன்று பாடசாலை காலை ஆராதனை நிகழ்வின் போது நூலக குழுவினர் அதிபரினால் ...

கல்முனை பொது நூலகத்தில் வாசிப்பை நேசிக்கும் மழலைகளின் நிகழ்வுகள்

Image
கல்முனை பொது நூலகத்தில் சிறுவர்களுக்கான வாசிப்பை நேசிக்கும் மழலைகளின் நிகழ்வுகள் ================================================================ கல்முனை பொது நூலகம், தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, சிறுவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை ஊட்டும் வகையில் பல்வேறுபட்ட நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது.   8-10-2024 அன்று நடைபெற்ற நிகழ்வில், சிறுவர்களுக்கு கதை கூறப்பட்டது. அவர்களும் தங்களுக்குப் பிடித்த திறமைகளை வெளிக்காட்டி மகிழ்ந்தனர். நூலகத்திற்கு தொடர்ந்து வந்து புத்தகங்களை படிக்கும்படி சிறுவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். மேலும் சிறுவர்களுக்கு பேப்பரை கொண்டு எளிய கைப்பணி பொருட்களை உருவாக்கும் முறையை செயல்விளக்கமாகக் காட்டப்பட்டது. இந்நிகழ்வு, மாநகர ஆணையாளா் என்.எம். நௌபீஸ் மற்றும் உதவி ஆணையாளர் ஏ. எஸ். எம். அசீம் ஆகியோரின் ஆலோசணைக்கு அமைவாக நூலகர் ஏ.எல்.எம்.முஸ்தாக் அவா்களின் தலைமையில் இடம்பெற்றது. கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச் ஜவுசி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பிரதம அதிதி மற்றும் நூலக ஊழியர்கள் அன்பளிப்புகள் மற்றும் இனிப்புகள் வழங...